search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி படம் திறப்பு"

    வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாராயணசாமி, ரங்கசாமி பங்கேற்றனர்.
    புதுச்சேரி:

    புதுவை வடக்கு மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதியின் உருவப்பட திறப்பு மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை சற்குரு ஓட்டலில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை தாங்கினார். 

    முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, என்.எஸ்.ஜே. ஜெபால், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ராஜாங்கம், பா.ம.க. செயலாளர் தன்ராஜ், விடுதலைசிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர்கழக தலைவர் வீரமணி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, புதியநீதிகட்சி தலைவர் பொன்னுரங்கம், முத்தியால்பேட்டை தொகுதி தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினார்.
    ×